அரசு கல்லூரி ஆசிரியர்கள் நூதன போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பல்கலைக்கழகங்களுடன் அரசுக் கல்லூரிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாநிலக் கல்லூரிஆசிரியர்கள் இன்று தங்கள் கண்களில் கறுப்புத் துணிகளைக் கட்டிக் கொண்டு போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் உள்ள 67 அரசுக் கல்லூரிகளும் அந்தந்த பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன்இணைக்கப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.

இதைத் தொடர்ந்து கடந்த வாரம் முதல் அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்க ஆதரவாக அரசுக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்கள் கண்களில்கறுப்புத் துணிகளைக் கட்டிக் கொண்டு போராட்டம் நடத்தினர்.

கண்களில் கறுப்புத் துணிகளைக் கட்டியவாறே அவர்கள் தமிழக அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.

கூட்டுப் போராட்டம்:

இதற்கிடையே அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளைக் கண்டு கொள்ளாமல்தொடர்ந்து நிராகரித்து வரும் தமிழக அரசின் செயலைக் கண்டித்து வரும் செப்டம்பர் 3ம் தேதி மாவட்டத்தலைநகரங்களில் மறியல் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தின்தலைவர் ஸ்ரீதரன் கூறினார்.

இந்தப் போராட்டங்களில் லட்சக்கணக்கான ஆசிரியர்களும் ஊழியர்களும் கலந்து கொள்வார்கள் என்றும்அதற்கும் அரசு செவி சாய்க்காவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும்ஸ்ரீதரன் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+