சென்னை மாநகராட்சி ரகளை: ஆளுநரிடம் திமுகவினர் மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகராட்சியில் நேற்று ஏற்பட்ட பயங்கர ரகளை தொடர்பாக தமிழக ஆளுநர் ராமமோகன் ராவிடம்திமுக கவுன்சிலர்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.

நேற்று நடந்த சென்னை மாநகராட்சிக் கூட்டத்தின் போது அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்களுக்கிடையேபயங்கரமான மோதல் ஏற்பட்டது. கத்திகள், சோடா பாட்டில்கள், செருப்புகள், மைக்குகள் ஆகியவை வீசப்பட்டன.

இச்சம்பவத்தில் சில திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் காயமடைந்தனர். சிலருக்குப் பற்கள் உடைந்தன.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக திமுகவினர் இன்று ஆளுநரைச் சந்தித்து புகார் மனுகொடுத்தனர்.

திமுக தொழிற்சங்கத் தலைவரும் எம்.பியுமான குப்புசாமி, சென்னை மாநகராட்சி திமுக தலைவர் மலையன்ஆகியோர் தலைமையில் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற திமுகவினர், ராமமோகன் ராவிடம் மனுவைக்கொடுத்தனர்.

மேலும் நேற்று நடந்த ரகளையின் போது எடுக்கப்பட்ட வீடியோ படங்கள், புகைப்படங்கள் உள்ளிட்டஆதராங்களையும் அவர்கள் ஆளுநரிடம் அளித்தனர்.

அதன் பின்னர் நிருபர்களிடம் குப்புசாமியும் மலையனும் கூறுகையில், இந்தப் புகார் குறித்து நடவடிக்கைஎடுக்கப்படும் என்று ஆளுநர் உறுதி அளித்ததாகத் தெரிவித்தனர்.

திமுகவினரைத் தவிர வேறு சில எதிர்க் கட்சி உறுப்பினர்களும் அப்போது அவர்களுடன் ஆளுநர் மாளிகைக்குச்சென்றனர்.

இதற்கிடையே நேற்றைய சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அதிமுகஉறுப்பினர்களை அமைச்சர் சம்பத் இன்று நேரில் சென்று பார்த்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+