கணக்கு காட்டாத மாஜி திமுக அமைச்சர் தேர்தலில் போட்டியிட தடை
சென்னை:
முன்னாள் திமுக அமைச்சர் கோமதி சீனிவாசன், தேர்தல் கணக்கு செலவுகளைத் தாக்கல் செய்யாத காரணத்தால் 3ஆண்டுகளுக்குத் தேர்தலில் அவர் போட்டியிட தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் முடிந்தவுடன் தங்களது தேர்தல் செலவுக் கணக்கை தேர்தல்கமிஷனிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
அப்படிச் செய்யாவிட்டால் அவர்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்.
இந்நிலையில் கடந்த சட்டசபைத் தேர்தலில் வலங்கைமான் தொகுதியில் கோமதி சீனிவாசன் போட்டியிட்டார்.ஆனால் தேர்தல் கணக்கு வழக்கை அவர் இதுவரை தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து அவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
அவரைத் தவிர மேலும் ஒன்பது பேருக்கும் தேர்தலில் போட்டியிடத் தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.












Click it and Unblock the Notifications