கொள்ளேகால் அருகே டாக்டரை கடத்தினான்
கொள்ளேகால்:
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவைக் கடத்திச் சென்றுள்ள நிலையில் வீரப்பன் இன்று ஒரு டாக்டரையும்கடத்தியுள்ளான்.
கொள்ளேகால் அருகில் உள்ள லோகன்னஹள்ளி பகுதியைச் சேர்ந்த ஒரு டாக்டரை இன்று அதிகாலை வீரப்பன்கடத்தியுள்ளதாக அதிரடிப்படையினர் தெரிவித்தனர். ஆனால் கடத்தப்பட்ட டாக்டர் யார் என்பது இன்னும்தெரியவில்லை.
வீரப்பனிடம் பணயக் கைதியாக உள்ள நாகப்பாவுக்கு உடல் நலம் குறைந்து விட்டதாகவும் அவருக்கு சிகிச்சைஅளிப்பதற்காகவே இந்த டாக்டரை வீரப்பன் கடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த இரண்டாவது கடத்தலிலிருந்து வீரப்பன் இன்னும் கொள்ளேகால் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் தான்பதுங்கியுள்ளான் என்று தெரிகிறது.
இதையடுத்து கர்நாடக அதிரடிப்படையினர் அப்பகுதியில் வீரப்பன் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இருந்தாலும் டாக்டர் கடத்தப்பட்டதாக வரும் செய்திகளை கர்நாடக டி.ஜி.பியான பாஸ்கர் மறுத்துள்ளார்.
டாக்டர் கடத்தல் வதந்தியா?
தமிழக எல்லைக்குள் தான் அந்த டாக்டர் கடத்தப்பட்டார் என்றும் தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
ஆனால் தமிழக அதிரடிப்படை டி.ஜி.பியான நடராஜன் இச்செய்தியை மறுத்துள்ளார்.
இது போன்ற வதந்திகள் பரவிக் கொண்டு தான் உள்ளன. இது குறித்து கர்நாடக அதிரடிப்படையினரிடம் தொடர்புகொண்டு கேட்டோம். அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று அவர்கள் கூறினார்கள் என்று நடராஜன் கூறினார்.
டாக்டர் கடத்தப்பட்டார் என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் எங்களுக்கு வரவில்லை என்று கூறியஅவர், தமிழக எல்லைக்குள் வீரப்பன் நுழைந்தால் உடனடியாகப் பிடிபடுவான் என்றும் அந்த அளவுக்கு எல்லைநெடுகிலும் தமிழக அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.