""நெடுமாறனை தூதராக அனுப்ப முடியாது"": ஜனா. கிருஷ்ணமூர்த்தி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
வீரப்பனால் கடத்தப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை மீட்பதற்காக பொடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறனை அனுப்ப இயலாது என்று மத்தியசட்டத்துறை அமைச்சர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
பெங்களூரில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
நாகப்பாவை மீட்பதற்காக மனிதாபிமான அடிப்படையில் தூதராகக் காட்டுக்குள் செல்லத் தயார் என்றுநெடுமாறன் கூறியுள்ளார்.
ஆனால் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அவரை அரசு தூதராக அனுப்ப அந்தச் சட்டத்தில் இடம்இல்லை.
தனி ஒரு நபருக்காக பொடா சட்டத்தைத் திருத்த முடியாது என்றார் ஜனா.












Click it and Unblock the Notifications