தலைமைச் செயலகமா? அதிமுக அலுவலகமா?: நல்லகண்ணு கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளையும் மக்களின் கவனத்தில் இருந்து திசை திருப்பவே சோனியகாந்தி குறித்து ஜெயலலிதா திடீரென அவதூறாகப் பேசி வருகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் நல்லக்கண்ணு கூறியுள்ளார்.

நிருபர்களிடம் அவர் கூறுகையில், மாநிலத்தில் எத்தனையோ பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவேண்டியுள்ளது. ஆனால் அவற்றைக் கவனிப்பதை விட்டு விட்டு சோனியா காந்தியை விமர்சிப்பதில் முதல்வர்ஜெயலலிதா நேரத்தை செலவிடுவது வருத்தம் தருகிறது.

ஒரு அரசியல் கட்சித் தலைவரை விமர்சிப்பதற்காக தலைமைச் செயலகத்தைப் பயன்படுத்தியிருப்பதுகண்டனத்துக்குரியது.

சோனியாவை விமர்சிக்க வேண்டும் என்று முடிவு செய்த ஜெயலலிதா அதை அதிமுக அலுவலகத்தில் வைத்துசெய்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு தலைமைச் செயலகத்தையே கட்சி அலுவலகமாக மாற்றியது தவறு என்றார்நல்லகண்ணு.

சோனியா குறித்து தான் பேசிய நிருபர்கள் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர், உள்துறைச்செயலாளர் முனீர் ஹோதா உள்ளிட்ட அதிகாரிகளையும் உட்கார வைத்திருந்தார் ஜெயலலிதா என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+