தம்பி கொலைக்கு பழிவாங்கவே இந்தக் கடத்தல்: வீரப்பன்
பெங்களூர்:
வீரப்பனிடம் இருந்து நேற்றிரவு இன்னொரு கேசட் வந்து சேர்ந்தது.
அதில், நாகப்பாவை விடுவிக்க வேண்டுமானால் பழ.நெடுமாறனையும் கொளத்தூர் மணியையும் தூதுவர்களாக காட்டுக்குள் அனுப்பவேண்டும் என வீரப்பன் நிபந்தனை விதித்துள்ளான்.
ஆனால், சிறையில் இருப்பவர்களை தூதுவராக அனுப்ப முடியாது என கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கூறிவிட்டார்.
இது வீரப்பனிடம் இருந்து வந்துள்ள இரண்டாவது கேசட் என அரசு கூறுகிறது. இந்தக் கேசட்டை சாம்ராஜ்நகர் காமகெரேயில் உள்ளநாகப்பாவின் மனைவிக்கு நேற்று மாலை போஸ்ட் மூலம் வந்து சேர்ந்தது.
உடனே அவர் இது தொடர்பாக அதிரடிப்படையினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து கேசட்டை வாங்கிச் சென்றனர்.
நெடுமாறன், கொளத்தூர் மணியை அனுப்புக:
அந்த கேசட்டில் வீரப்பன் கூறியிருப்பதாவது:
முதல்வர் கிருஷ்ணா அவர்களே, வணக்கம். நாகப்பாவை விடுவிக்கக் கோரி கொளத்தூர் மணி ரேடியோவில் எனக்கு கோரிக்கைவிடுத்ததைக் கேட்டேன். அதன் பின்னர் தான் இந்தக் கேசட்டை அனுப்ப முடிவு செய்தேன்.
நாகப்பா அமைச்சராக இருந்தபோது தான் அதிரடிப்படையின் தலைவராக இருந்த சங்கர் பித்ரி எனது தம்பி அர்ஜூனனை கோர்ட்டுக்குகொண்டு செல்லும் வழியில் கொன்றான். அவனுக்கு உதவியாக இருந்ததது நாகப்பா. இதனால் தான் அவரைக் கடத்தி வந்துள்ளேன்.
நான் ஏற்கனவே கேட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருந்து வருகிறீர்கள். அவற்றை முதலில் நிறைவேற்ற வேண்டும். எனக்குஉங்கள் பணம் எதுவும் தேவையில்லை.
காட்டைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ள அதிரடிப்படையை வாபஸ் பெற வேண்டும்.
நாகப்பாவை விடுவிப்பது குறித்துப் பேச பழ.நெடுமாறனையும் கொளத்தூர் மணியையும் அனுப்ப வேண்டும் என்று வீரப்பன்கூறியுள்ளான்.
நடுங்கிய குரலில் நாகப்பா பேச்சு:
நாகப்பாவும் இந்தக் கேசட்டில் பேசியுள்ளார். அவரது குரல் மிகவும் சோர்ந்த நிலையில் நடுக்கமானதாக உள்ளது. கேசட்டில் அவர்கூறியிருப்பதாவது:
நான் உடல் நலத்துடன் இருக்கிறேன். உணவுப் பிரச்சனை தான் மிகுந்த சிரமமத்தைத் தருகிறது. எனது உயிர் முதல்வர் கிருஷ்ணாவின்கையில் தான் உள்ளது. வீரப்பனின் கோரிக்கைகளை கிருஷ்ணா ஏற்க வேண்டும். காட்டைச் சுற்றியுள்ள போலீஸ் படையை கிருஷ்ணாஉடனே திரும்பப் பெற வேண்டும்.
குழப்பம்:
இந்த கேசட் எங்கிருந்து வந்தது என்பதில் குழப்பம் நிலவுகிறது. கர்நாடக மாநிலம் பிடுதி என்ற இடத்தில் இருந்து இந்த கேசட் பார்சல் மூலம்நாகப்பா மனைவிக்கு அனுப்பப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர் ஆனால், இது பெங்களூரில் இருந்து வந்ததாக இன்னொரு தகவல்தெரிவிக்கிறது.
மேலும் இந்தக் கேசட்டின் நம்பகத்தன்மை குறித்தும் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காட்டுக்குள் இருக்கும்வீரப்பனால் எப்படி கேசட் அனுப்ப முடிந்தது என்பது குறித்து ஆராய போலீசாருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணா பேட்டி:
இந் நிலையில் டெல்லி செல்லும் முன் நிருபர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, கைதாகி கர்நாடக சிறையில் இருக்கும்கொளத்தூர் மணியை எப்படி தூதுவராக அனுப்ப முடியும்? அதே போல நெடுமாறனும் தமிழக சிறையில் இருக்கிறார். அவரை எப்படிஅனுப்ப முடியும் என்றார்.
-->