நாகப்பா விடுவிப்பு?
தாளவாடி:
கடத்திச் செல்லப்பட்ட நாகப்பாவை வீரப்பன் விடுவித்துவிட்டதாக சிறிது நேரத்துக்கு முன் தகவல் கிடைத்துள்ளது.
தாளவாடி காட்டுப் பகுதியில் நாகப்பாவை அவன் விட்டுவிட்டுச் சென்றுவிட்டதாகவும், அவர் இன்று மாலைக்குள் மீட்கப்படுவார் என்றும்தெரிகிறது.
1,500 கர்நாடக அதிரடிப்படையினரும் 200 மத்திய எஸ்.எஸ்.ஜி. படையினரும் வீரப்பன் கும்பல் பதுங்கியுள்ள தின்னஹள்ளி காட்டுப்பகுதியை சுற்றி வளைத்துவிட்டதாகவும் இதனால் வேறு வழியில்லாமல் நாகப்பாவை அங்கேயே விட்டுவிட்டு வீரப்பன்தப்பியோடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
எஸ்.எஸ்.ஜி. படையினரின் 3 ஹெலிகாப்டர்களும் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவை தொடர்ந்து காட்டுப்பகுதியை சுற்றி வருகின்றன. இதனால் கொள்ளேகால் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
ஆனால், இந்தச் செய்திகளை வதந்தி என கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார். அதிரடிப்படை குறித்து எந்தச்செய்தியையும் உறுதி செய்ய நான் தயாராக இல்லை. அந்தப் படை தனது வேலையை செய்து வருகிறது என்றார் கார்கே.
-->












Click it and Unblock the Notifications