For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாஜ்பாயுடன் ஜெ. தொலைபேசியில் பேச்சு: அதிருப்தியை தெரிவித்தார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மிகக் குறுகிய கால அவகாசத்தில் காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தைக் கூட்டியதற்கு பிரதமர் வாஜ்பாயிடம்தனது அதிருப்தியை முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

காவிரி ஆணையக் கூட்டம் டெல்லியில் பிரதமர் தலைமையில் இன்று மாலை நடக்கிறது. கர்நாகத்தின்நிர்பந்தத்தால் இக் கூட்டம் நடக்கிறது. இது தொடர்பாக நேற்று இரவு தான் தமிழகத்துக்குத் தகவல்தெரிவிக்கப்பட்டது.

இதில் கர்நாடக, கேரளா மற்றும் புதுவைப் பிரதேச முதல்வர்கள் பங்கேற்கிறார்கள். ஆனால், தமிழக முதல்வர்ஜெயலலிதா இதில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக அமைச்சர் பொன்னையன் பங்ற்ேகிறார்.

இந் நிலையில் பிரதமர் வாஜ்பாயுடன் முதல்வர் ஜெயலலிதா இன்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டுபேசினார். குறுகிய காலத்தில் காவிரி நதி நீர் ஆணையத்தைக் கூட்டியதற்கு தனது அதிருப்தியைத் தெரிவித்தார்.

இந் நிலையில் பிரதமருக்கு ஒரு கடிதத்தையும் ஜெயலலிதா அனுப்பியுள்ளார். அதில், எனக்கு உடல் நிலைசரியில்லை. பாசன விவகாரங்களைக் கவனிக்கும் பொதுப்பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தேனிமாவட்டத்தில் சுற்றுப் பயணத்தில் உள்ளார். எனவே, தமிழகத்தின் சார்பில் நிதி அமைச்சர் பொன்னயன்பங்கேற்பார் என்று ஜெயலலிதா கடிதத்தில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X