கல்லூரிகள் திறந்ததும் மீண்டும் போராட்டம்: மாணவர்கள்
திருச்சி:
தமிழகம் முழுவதிலும் 16ம் தேதி முதல் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய மாணவர்சங்கத் தலைவர் தங்க மோகன் அறிவித்துள்ளார்.
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பது, மேலூர் கல்லூரி மாணவர்கள், மதுரை மீனாட்சிமகளிர் கல்லூரி மாணவிகள் ஆகியோர் மீது அத்துமீறி போலீஸார் நடந்து கொண்டது ஆகியவற்றைக் கண்டித்துஅரசுக் கல்லூரி மாணவ, மாணவியர் போராடி வருகிறார்கள்.
இதையடுத்து கல்லூரிகளுக்கு வரும் 15ம் தேதி விடுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து திருச்சியில் கூடி மாணவர்கள் விவாதித்தனர். இதுகுறித்து இந்தியமாணவர் சங்க தமிழ் மாநிலத் தலைவர் தங்க மோகன் கூறுகையில்,
16ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. அன்று முதல் கல்லூரிகளுக்குச் செல்லாமல் வகுப்புப் புறக்கணிப்புப்போராட்டம் நடத்த மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இது தவிர கண்ணில் கருப்புத்துணியைக் கட்டிக் கொண்டு மனிதச் சங்கிலி அமைப்பது, பொதுமக்களிடம்பிச்சையெடுத்து எங்களது கோரிக்கைகளை கூறுவது, லட்சக்கணக்கான பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கிகுடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பது ஆகிய போராட்டங்களையும் மாணவர்கள் நடத்தவுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications