டாக்சிகளை கடத்தி டிரைவர்கள் கொலை: 2 பேர் கைது
சென்னை:
டாக்சியை டிரைவர்களுடன் கடத்திச் சென்று அவர்களைக் கொலை செய்து பிணத்தை வீசி விட்டு, டாக்சிகளுடன்தலைமறைவாகி விடும் கும்பலைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
பெரம்பலூர், கடலூர் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் அடிக்கடி கார்கள், டாக்சிகள் காணாமல் போய் வந்தன.காணாமல் போன வாகனங்களின் டிரைவர்கள் குறித்தும் எந்த விவரமும் தெரியாமல் இருந்து வந்தது.
இந் நிலையில் அரியலூர் அருகே சிலரது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் ஒருவரது உடல் கடலூரைச்சேர்ந்த டாக்சி டிரைவரின் உடல் என்று தெரிய வந்தது.
இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் 2 பேர் சிக்கினர். அவர்கள்தான் டிரைவர்களை அழைத்துச்சென்று அவர்களைக் கொலை செய்து விட்டு டாக்சிகளுடன் தலைமறைவானவர்கள் என்று தெரியவந்தது.ட
இவர்களுடன் சேர்ந்து கொலைகளை செய்து டாக்சிகளைக் கடத்திய மேலும் 6 பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.