காவிரி: வாய் மூடிக் கிடக்கும் தமிழக கட்சிகள் - ஜெ. வேதனை
சென்னை:
காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையுடன் போராடும் நிலையில்தமிழகத்தில் உள்ள பல கட்சிகள் வாய் மூடிக் கிடப்பது வேதனையாக உள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாகூறினார்.
சென்னையில் இன்று ஒரு திருமண விழாவில் ஜெயலலிதா பேசுகையில்,
தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்து விடக் கூடாது என்பதில் கர்நாடக அரசு மட்டுமல்லாமல் அம்மாநில எதிர்க்கட்சிகளும் கூட உறுதியாக உள்ளன. இவ்விவகாரத்தில் அம்மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும்ஒற்றுமையுடன் போராடி வருகின்றன.
ஆனால் காவிரிப் பிரச்சனை என்பது விவசாயிகளின் பிரச்சனை மட்டுமல்ல. அது ஒவ்வொரு தமிழ்க் குடிமகனின்ஜீவாதாரப் பிரச்சனை.
காவிரி இல்லையேல் தமிழக மக்களின் வாழ்வே இல்லை என்ற நிலை தான் தற்போது ஏற்பட்டுள்ளது.
இருந்த போதிலும் தமிழகத்தில் உள்ள பல கட்சிகளும் வாய் மூடிக் கிடப்பது தான் வேதனையாக உள்ளது. இதைக்கண்டும் காணாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
பிரதமர் வாஜ்பாய் வெளிநாடு (அமெரிக்கா) சென்று வந்த பிறகு தான் காவிரி ஆணையம் கூட்டப்படுவதாகஇருந்தது. ஆனால் கர்நாடகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. மத்திய அமைச்சரான அனந்தகுமார் தான் வாஜ்பாயைவலியுறுத்தி உடனடியாக ஆணையக் கூட்டத்தைக் கூட்டுமாறு வலியுறுத்தினார்.
இதனால் தான் கடந்த சனிக்கிழமை காவிரி ஆணையக் கூட்டம் அவசரக் கோலத்தில் கூட்டப்பட்டது.தெளிவில்லாத, ஏற்றுக் கொள்ளவே முடியாத முடிவையும் அக்கூட்டத்தில் வாஜ்பாய் அறிவித்துள்ளார்.
வாஜ்பாய் தலைமையிலான காவிரி ஆணையத்தின் இந்தத் தவறான முடிவைத் தட்டிக் கேட்க தமிழகத்தைச் சேர்ந்தமத்திய அமைச்சர்களும் தட்டிக் கேட்கத் தவறி விட்டனர் என்றார் ஜெயலலிதா.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications