சேலம் ரயில் நிலையத்தில் அமைச்சர் ஆய்வு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம்-கரூர் அகல ரயில் பாதை விரைவில் முடிவடையும் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்திகூறியுள்ளார்.
சேலத்தில் ரயில் நிலையத்தை அவர் திங்கள்கிழமை பார்வையிட்டார். பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டஅவர் அங்கு பயணிகளிடம் குறையும் கேட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சேலம்-கரூர் அகல ரயில்பாதையில் 51 கிலோமீட்டர் தொலைவுக்குபாதை அமைக்கும் பணி முடிவுற்றுள்ளது. மீதமுள்ள பாதையும் விரைவில் முடிந்து விடும்.
சேலம்-கரூர் அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்கு இந்தஆண்டு ரூ. 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை-ஈரோடு இடையிலான பயணிகள் ரயில் விரைவில் சேலம் வரை நீட்டிக்கப்படும்.
சேலத்தில் ரயில்வே கோட்ட அலுவலகம் அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன என்றார்அவர்.
-->












Click it and Unblock the Notifications