For Daily Alerts
Just In
தூத்துக்குடியில் 4 குண்டுகளுடன் 3 பேர் கைது
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் வெடிகுண்டுகளுடன் திரிந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் வெடிகுண்டுகளுடன் சிலர் சுற்றுவதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து அவர்கள்தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினர்.
அப்போது போலீஸாரின் பிடியில் சுந்தர் சிங் என்ற பாம் சுந்தர், வசந்த் மற்றும் இன்னொருவர் ஆகிய 3 பேர்சிக்கினர்.
இவர்களிடம் நடத்திய சோதனையில் 4 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. எதற்காக இவர்கள்குண்டுகளுடன் அலைந்தனர் என்று தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது.
-->
Comments
Story first published: Sunday, September 8, 2002, 5:30 [IST]