சென்னை வேளாங்கன்னி ஆலய தேர் பவனி: மிக சிறப்பாய் நடந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கன்னி ஆலய தேர் திருவிழா நேற்று மிக விமரிசையாக நடந்தது.
மாதாவின் பிறந்த நாள் விழா, நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கன்னி ஆலயத்தில் சமீபத்தில் நடந்து முடிந்தது.அதேபோல, பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற சிவாஜி நகர் மாதா ஆலயத்திலும் கடந்த 10 நாட்களாக நடந்து வந்தவிழா நேற்று முடிவடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
சென்னை பெசன்ட் நகர் வேளாங்கன்னி ஆலயத்திலும் இந்த விழா நேற்று நடந்து முடிந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர். பெசன்ட் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்த தேர் இறுதியில் ஆலயத்தை அடைந்தது.












Click it and Unblock the Notifications