கற்பழித்தவருக்கே பெண்ணை கட்டி வைக்க கோரி கோரி சாலை மறியல்

Subscribe to Oneindia Tamil

முதுகுளத்தூர்:

முதுகுளத்தூர் அருகே பெண்ணைக் கற்பழித்தவருக்கே அவரைத் திருமணம் செய்து வைக்கக் கோரி கிராமத்துமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது கே.ஆர்.பட்டனம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தேவி.பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர் வேல் முருகன்.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தேவியை, வேல் முருகன் கற்பழித்து விட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர்தேவியை கழற்றிவிட்டுவிட்டார்.

இதையடுத்து தேவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அவரது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில்ஈடுபட்டனர். தேவியை, வேல்முருகன்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.

இதனால் ராமநாதபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விரைந்து வந்து கிராமத்தினரைசமாதானப்படுத்தினர். அதன் பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.

இது தொடர்பாக வேல்முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+