For Quick Alerts
For Daily Alerts
Just In
இன்று செப்.11: அமெரிக்க தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு
சென்னை:
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக கட்டடத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையக் கட்டடடங்களை தீவிரவாதிகள் தாக்கியதன்முதலாவது ஆண்டு நினைவு தினம் இன்று (புதன்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.இதையடுத்து உலகம் முழுவதிலும் உள்ள அமெரிக்கர்கள், அமெரிக்கர்களின் உடமைகள், கட்டடங்கள் மற்றும்சொத்துக்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக கட்டடத்திற்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்தியபோலீஸார் தூதரக கட்டடத்தை சுற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
Comments
Story first published: Wednesday, September 11, 2002, 5:30 [IST]