வீரப்பனுக்கு ஏ.கே.47 கொடுத்த தமிழர் விடுதலைப் படை உறுப்பினர் கைது

Subscribe to Oneindia Tamil

ஜெயங்கொண்டம்:

தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த அறிவழகன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருவதாக வந்த தகவலின் பேரில் அறிவழகனைபோலீஸார் பெரம்பலூர் கைது செய்தனர்.

அறிவழகனிடம் க்யூ பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையின்போதுவீரப்பனிடம் ஏ.கே.47 ரக துப்பாக்கியைக்கொடுத்ததாக அறிவழகன் ஒப்புக் கொண்டுள்ளார்.

வேறொரு வழக்கில் கைதாகி, பின்னர் ஜாமீனில் விடுதலையாகி, போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தஅறிவழகனை கைது செய்த க்யூ பிரிவு போலீசார் அவரை சத்தியமங்கலத்திற்குக் கொண்டு வந்தனர்.

அறிவழகனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

பொடா சட்டத்தின் கீழ் ஏற்கனவே தமிழர் விடுதலைப் படை தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+