இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பெங்களூர்::
காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில கன்னட அமைப்புகள் இன்று நடத்தும்பந்த் காரணமாக பெங்களூரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர ஏராளமான தனியார் நிறுவனங்கள், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள்ஆகியவையும் நேற்றே விடுமுறை அறிவித்து விட்டன.
சாலைகளில் வாகனப் போக்குவரத்து அவ்வளவாக இல்லை. ஓரிரண்டு கார்கள், டூ வீலர்கள் மற்றும் ஆட்டோக்கள்மட்டுமே ஆங்காங்கு ஓடிக் கொண்டிருந்தன.
தமிழகப் பதிவு எண் கொண்ட வாகனங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை வெளியில் எடுத்து வர வேண்டாம்என்று ஏற்கனவே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குடியிருப்புகள் இருக்கும் பகுதிகளில் இன்று காலை சிறுசிறு கடைகள் திறக்கப்பட்டிருந்தன. ஆனால் எங்கிருந்தோவந்த கும்பல்கள் அந்தக் கடைகளையும் உடனே அடைக்குமாறு மிரட்டியதைத் தொடர்ந்து அவையும் உடனடியாகஇழுத்து மூடப்பட்டன.
இதையடுத்து பெங்களூரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர்.
வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டு விடாமல் தடுக்கும் பொருட்டு பெங்களூர் மாநகர் முழுவதும் போலீஸ்வாகனங்கள் ரோந்து சுற்றி வருகின்றன. இதுவரை தகாத சம்பவம் எதுவும் நடக்கவில்லை.
அமைதியான பந்த்:
இந்நிலையில் பெங்களூரின் முக்கிய சாலைகள் அனைத்தும் இன்றைய பந்த் காரணமாக வெறிச்சோடிக் கிடந்தன.எப்போதும் பரபரப்புடன் காணப்படும் மெஜஸ்டிக் பஸ் நிலையம் இன்று படு அமைதியுடன் காணப்பட்டது.
ஆனாலும் போலீஸ் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளதால் பந்த் மிகவும் அமைதியாகவே நடந்து வருவதாகபெங்களூர் மாநகரப் போலீஸ் கமிஷனர் சங்கிலியானா கூறினார்.
அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படாத போதிலும், ஊழியர்களின் வருகை இன்றுகுறைவாகவே காணப்பட்டது. ஏராளமான வங்கிகளிலும் இதே நிலையே நீடித்தது.
-->












Click it and Unblock the Notifications