சென்னையில் கிருஷ்ணா கொடும்பாவி எரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்திற்கு காவிரியில் குறைவான நீர் திறந்து விட்டதற்காக சென்னையில் இன்று கர்நாடக முதல்வர்கிருஷ்ணாவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
சென்னை-சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முன் வந்த தமிழ் தேசிய முன்னணி என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள்திடீரென்று கிருஷ்ணாவின் உருவபொம்மையை எரித்தனர்.
பின்னர் காவிரியில் தமிழகத்திற்கு குறைவான அளவு நீர் திறந்து விட்ட கர்நாடக அரசையும் முதல்வரையும்கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
யாரும் எதிர்பார்க்காத வேளையில் இந்தச் சம்பவம் நடந்தது. விஷயம் கேள்விப்பட்ட போலீசார் விரைந்து வந்துபோராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 20 பேரைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications