""தமிழ் மந்திரம் புரியாத கடவுளை ஏன் வணங்க வேண்டும்?"" - கருணாநிதி
சென்னை:
கரூர் அருகே உள்ள ஒரு கோவிலில் சமீபத்தில் தமிழிலேயே மந்திரங்கள் கூறப்பட்டு கும்பாபிஷேக விழாநடைபெற்றதை எதிர்த்தவர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
கரூர் அருகே காவிரி ஆற்றங்கரையில் உள்ள திருமுக்கூடலூர் கோவிலில் தமிழிலேயே மந்திரங்கள் ஓதப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இதற்கு காஞ்சி சங்கராச்சாரியாரும் தமிழக இந்து சமய அறநிலையத்துறையும் எதிர்ப்பும் அதிருப்தியும்தெரிவித்தனர்.
ஆகம முறைப்படி வேத மந்திரங்களை ஓதாமல் இப்படி தமிழிலேயே மந்திரத்தைச் சொன்னால் அதற்குரிய பலன்கிடைக்காது என்று காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழில் மந்திரம் ஓதப்பட்டதை எதிர்ப்பவர்களை கருணாநிதி இன்று கடுமையாகக் கண்டித்தார்.சென்னையில் ஒரு திருமண விழாவில் அவர் பேசுகையில்,
சமஸ்கிருத மொழியிலேயே கோவில்களில் வேத மந்திரங்கள் ஓதப்படுவது என்பது வெறும் மூட நம்பிக்கையேதவிர வேறொன்றும் இல்லை.
தமிழில் வேத மந்திரங்கள் ஓதப்படுவதை ஏற்காதவர்கள் தமிழகத்திலேயே இருப்பதற்கு அருகதை இல்லாதவர்கள்.
தமிழில் கூறப்படும் மந்திரங்கள் எந்தக் கடவுளுக்காவது கேட்கவில்லை அல்லது புரியவில்லை என்றால் அந்தக்கடவுளுக்கும் தமிழகத்தில் இடம் கிடையாது.
""தமிழ் தெரிந்தால் நீயும் கடவுளாக நீ இங்கேயே இரு. இல்லையென்றால் மூட்டை கட்டிக் கொண்டு வெளியேபோ"".
இப்படி நான் கூறுவதால் நான் கடவுளுக்கு எதிரி என்று கூறிவிட முடியாது. ஆனால் தமிழைப் புரிந்து கொள்ளமுடியாத கடவுளை நாம் ஏன் வணங்க வேண்டும் என்றுதான் கேட்கிறேன் என்றார் கருணாநிதி.
கடும் எதிர்ப்புக்கு இடையே தமிழில் நடந்த கும்பாபிஷேகம்