"ஜெ. எப்போதும் உண்மை பேசுவார்": கருணாநிதி கிண்டல்
சென்னை:
காவிரி பிரச்சினை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ள புகாருக்குப் பதில் அளித்த திமுக தலைவர்கருணாநிதி, அவர் (ஜெயலலிதா) எப்போதுமே உண்மையே பேசும் பழக்கம் கொண்டவர் என்று கிண்டலாகப்பதிலளித்தார்.
அண்ணா அறிவாலயத்தில் சாலைப் பணியாளர்கள் திரளாக வந்து கருணாநிதியைச் சந்தித்து மனு கொடுத்தனர்.தங்களுக்கு மறுபடியும் அரசு வேலை கிடைக்க உதவ வேண்டும் என்றும் அவரிடம் அவர்கள் கோரிக்கைவிடுத்தனர். அவர்களை சமாதானப்படுத்திய கருணாநிதி, திமுக தன்னால் ஆனதை செய்யும் என்றார்.
பின்னர், காவிரிப்பிரச்சினையில் கருணாநிதி அமைதியாக இருப்பது கண்டனத்துக்குரியது என்று ஜெயலலிதாகூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் எப்போதுமே உண்மைதான் பேசுவார் என்று சிரித்துக்கொண்டே கிண்டலாக கூறினார் கருணாநிதி.
பின்னர் சாலைப் பணியாளர்கள் குறித்துக் கூறுகையில், தமிழகத்தில் சாலைகளே இல்லை. பிறகு எதற்குப்பணியாளர்கள் என்று அரசு நினைத்து விட்டது போல என்று நக்கலாகப் பதில் கூறினார்.
-->












Click it and Unblock the Notifications