சாகும் வரை உண்ணாவிரதம்: நாகப்பா மனைவி எச்சரிக்கை
கொள்ளேகால்:
நாகப்பாவை பத்திரமாக மீட்கும் வகையில், அதிரடிப்படையினர் தங்கள் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தாவிட்டால், பெங்களூரில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நாகப்பாவின் மனைவி பரிமளாஎச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பரிமளா பேசுகையில்,
என் கணவரை பத்திரமாக மீட்க வேண்டும். அதிரடிப்படையினரின் நடவடிக்கைகள் தொடர்ந்தால் அவருக்குவிபரீதம் நேரலாம் என்று அனைவருக்கும் தெரியும். அப்படி இருந்தும், அதிரடிப்படை நடவடிக்கை
தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.என் கணவருக்கு ஏதாவது நேர்ந்தால் யார் பொறுப்பு? அதிரடிப்படையும், கர்நாடக அரசும் தான் பொறுப்பு ஏற்கவேண்டும்.
காமரகரே மக்கள் மிகவும் பொறுமையுடன் உள்ளார்கள். ஆனால் அதிரடிப்படை நடவடிக்கை தொடர்வதில்அவர்களுக்கு உடன்பாடில்லை. அவர்களை இனியும் நான் கட்டுப்படுத்தி வைக்க டியாது.
எனவே உடனடியாக அதிரடிப்படை நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் பெங்களூர் சட்டசபைகட்டடமான "விதான் செளதா" முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்றர் பரிமளா.
-->












Click it and Unblock the Notifications