வீரப்பனுக்கு ஏ.கே. 47 கொடுத்த மற்றொருவர் கைது
Subscribe to Oneindia Tamil
சத்தியமங்கலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு ஏ.கே. 47 துப்பாக்கியைக் கொடுத்து உதவிய மற்றொரு நபரைப் அதிரடிப்படைபோலீசார் கைது செய்துள்ளனர்.
வீரப்பனுக்கு உதவிய தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த அறிவழகன் என்பவரை பெரம்பலூரில் சமீபத்தில்போலீசார் கைது செய்தனர்.
அறிவழகனிடம் மேற்கொண்ட விசாரணையின் போது வீரப்பனுக்கு ஏ.கே. 47 ரக துப்பாக்கி கொடுத்ததை அவர்ஒப்புக் கொண்டார்.
அவரிடம் மேலும் தீவிர விசாரணை செய்ததில் வீரபாண்டியன் என்பவர் மூலம் தான் வீரப்பனுக்கு அந்தத்துப்பாக்கியைக் கொடுத்ததாகவும் அறிவழகன் கூறியிருந்தார்.
இதையடுத்து வீரபாண்டியனையும் இன்று மடக்கிப் பிடித்த அதிரடிப்படை போலீசார், அவரையும் சத்தியமங்கலம்அதிரடிப்படை முகாமிற்கு அழைத்து வந்தனர்.
கைதாகியுள்ள இருவரிடமும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications