மழை வேண்டி சென்னையில் யாகம்: பொதுமக்கள் "ஆப்சென்ட்"
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் மழை வேண்டி இந்து முன்னணி சார்பில் இன்று யாகம் நடத்தப்பட்டது.
இந்த யாகத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர் கலந்துகொண்டனர்.
கடும் வெயில் அடித்ததால் பொதுமக்கள் யாரும் இந்த யாகத்தைக் காண வரவில்லை.
வறட்சி அகன்று, மழை பொழிவதற்காக வருண பகவானை வேண்டி இந்த யாகம் நடத்தப்பட்டதாக இந்துமுன்னணியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் நடத்தப்படுகிறது.இதற்காக நடத்தப்பட்ட பூஜையின் போது தான் இந்த யாகமும் சேர்த்து நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications