திண்டுக்கல்லில் தலித் இளைஞர் கட்டி வைத்துக் கொடுமை
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் தலித் இனத்தைச் சேர்ந்தவரைக் கட்டி வைத்துக் கொடுமைப்படுத்தியதாக போலீஸில் புகார்செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அருகே உள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் கந்தன். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்.
இவருடைய நிலம் தொடர்பாக கந்தனுக்கும், கண்ணன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இந்தத் தகராறில் கந்தனை கயிறால் கட்டி வைத்து கண்ணனும், அவருடைய உறவினர்களும் நண்பர்களும்மிரட்டியுள்ளனர். மேலும் பல்வேறு விதமாக அவரைக் கொடுமைப்படுத்தியதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து போலீஸில் புகார் கூறப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications