சென்னை: பைல் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ
சென்னை:
சென்னை பாரிமுனை பகுதியில் ஒரு பைல் தயாரிக்கும் நிறுவனத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டதில் பல லட்சரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
பாரிமுனை ஆண்டர்சன் தெருவில் "கிங்ஸ் பைல்ஸ்" என்ற பைல்கள் (கோப்புகள்) தயாரிப்பு நிறுவனம் உள்ளது.
இங்கு இன்று (சனிக்கிழமை) அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு மொத்தம் 40 பேர்வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
தீவிபத்து ஏற்பட்டவுடன் ஊழியர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். அவர்களில் மூன்று பேர்மட்டும் மூன்றாவது மாடியில் சிக்கிக் கொண்டனர்.
வட சென்னை மாவட்ட இணை கமிஷனர் சைலேந்திர பாபு தலைமையில் போலீஸார் விரைந்து வந்தனர்.
சுமார் 15 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்தன. மேலும் தீயில் சிக்கிக்கொண்டவர்களையும் தீயணைப்புப் படையினர் மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர்.
பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் தீ அணைக்கப்பட்டது. இந்தத் தீவிபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ளபொருள்கள் எரிந்து சாம்பலாகின.
தீவிபத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->