காவிரியில் நாளை முதல் முறைப் பாசனம்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
மேட்டூர் அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டதால், நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் காவிரியில்முறை வைத்து தண்ணீர் விடப்படவுள்ளது.
கர்நாடகத்திலிருந்து வரும் காவிரி நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின்நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது.
இதையடுத்து முறைப்பாசனத்தை அறிமுகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி ஞாயிற்றிக்கிழமை மாலை முதல் ஐந்து நாட்களுக்கு கல்லணையில் தண்ணீர் திறந்து விடப்படும்.
அதன் பிறகு ஏழு நாட்களுக்கு வெண்ணாற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications