கிரையோஜெனிக் என்ஜின் வெற்றிகரமாக பரிசோதனை
மகேந்திரகிரி:
முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்ஜின் வெற்றிகரமாகப்பரிசோதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள திரவ ராக்கெட் எரிபொருள்ஆராய்ச்சிக் கழகத்தில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது.
அதி நவீன ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை இயக்கத் தேவையான திரவ எரிபொருள் (கிரையோஜெனிக்) என்ஜினைதயாரிக்கும் பணியில் இந்திய நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில வல்லரசு நாடுகளிடம் மட்டுமே இந்த வகை திரவ ராக்கெட் என்ஜின்உள்ளது.
தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் திரவ ராக்கெட் என்ஜின் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.அவ்வப்போது இதுதொடர்பான சோதனைகள் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று மேலும் ஒரு கிரையோஜெனிக் பரிசோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது.
சுமார் 720 விநாடிகளுக்கு இந்த திரவ என்ஜின் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால்எதிர்பார்ப்புக்கும் மேலாக 1,000 விநாடிகள் வரை இந்த என்ஜின் இயங்கி விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தியது.
இந்த வெற்றிகரமான பரிசோதனையைத் தொடர்ந்து கிரையோஜெனிக் என்ஜினை உருவாக்கிய "இஸ்ரோ"விஞ்ஞானிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications