தூத்துக்குடியில் பெரும் போராட்டம்: நாட்டுப் படகு மீனவர்கள் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே படகுகள் மோதி 3 மீனவர்கள் பலியான சம்பவத்தில் குற்றவாளிகள் மீது போலீஸார் உரியநடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்டம் முழுவதிலும் உள்ள மீனவர்களைத் திரட்டி போராடப் போவதாகமீனவர்கள் அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் பகுதியில் சமீபத்தில் நாட்டுப்படகு மீது விசைப் படகு பயங்கரமாகமோதியது. இதில் நாட்டுப்படகில் இருந்த 3 மீனவர்கள் பலியானார்கள். அவர்களில் ஒருவரது உடல் நேற்று தான்மீட்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக இதுவரை போலீஸாரும், மீன் வளத்துறையினரும் நடவடிக்கை ஏதும்எடுக்கவில்லை என்று நாட்டுப் படகு மீனவர்கள் புகார் கூறியுள்ளனர்.
இதே நிலை தொடர்ந்தால் மாவட்டம் முழுவதிலும் உள்ள மீனவர்களை ஒன்று திரட்டி பெரும் போராட்டம்நடத்தப்படும் என்று புன்னக்காயல் மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications