மேட்டூர் அணையில் நீர் மட்டம் குறைவு: கபினி அணையில் நீர் திறப்பு
மேட்டூர்:
கபினி அணையில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டதாக செய்தி வந்த போதிலும் மேட்டூர் அணையில் தொடர்ந்துநீர் மட்டம் குறைவாகவே உள்ளது.
தமிழகத்திற்கு உண்மையிலேயே எவ்வளவு தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளது என்று மத்திய அரசிடம்உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.
இந்நிலையில் திடீரென்று தமிழகத்திற்கு கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடத் தொடங்கியுள்ளது.கபினி அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளதாக கர்நாடக பொதுப்பணித்துறை அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் மேட்டூர் அணையில் நீர் மட்டம் குறைந்துகொண்டே வருகிறது.
கபினியில் திறந்து விடப்பட்ட நீரின் அளவு 2,000 கன அடி வரை மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது.தற்போது மேட்டூர் அணையில் 56.16 அடி வரை மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அணைக்கு விநிாடிக்கு 589 கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டுள்ளது.
இதற்கிடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் காவிரிப் பாசனப் பகுதிகளுக்கு முறைப் பாசனத்தைஅறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் முறைப் பாசனம் வேண்டாம் என்று விவசாயிகள்கோரியுள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications