மேட்டூர்: திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து மிகக் குறைவாக இருப்பதால், அணையிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்படும்தண்ணீரின் அளவை தமிழக அரசு குறைத்துள்ளது.
காவிரியில் கர்நாடகம் தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விடாமல் பிடிவாதம் பிடித்து வருகிறது. திடீரென நீர்விடுவது, திடீரென அணையை விவசாயிகளைக் கொண்டு மூடச் செய்வது என்று நாடகமாடி வருகிறது.
இதனால் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாகி வருகிறது. இதனால், பாசனப் பகுதிகளுக்கு நீரைத் திறந்துவிடுவதை குறைக்க வேண்டிய நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது.
இதுவரை விநாடிக்கு 15,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இதை இப்போது 12,000 கன அடியாக அரசுகுறைத்துள்ளது.
-->












Click it and Unblock the Notifications