விபச்சாரியை யார் "வைத்துக்" கொள்வது? - தகராறில் 2 பேர் வெட்டிக் கொலை
சென்னை:
சென்னையில் ஒரு விபச்சாரியை யார் "வைத்துக்" கொள்வது என்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக 2பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள திருவள்ளுவர் நகரில் போஸ் என்பவர் வசித்து வந்தார். இவர்புதுப்பேட்டையைச் சேர்ந்தவர். இவர் ஒரு கஞ்சா வியாபாரி. துரைப்பாக்கம் பகுதிக்கு வந்த பிறகு பலமுறை கஞ்சாவழக்கில் கைதாகி வெளியே வந்துள்ளார்.
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த "ஆட்டோ சேகர்" என்ற ஆட்டோ டிரைவருக்கும் இடையே விபச்சாரி ஒருவர்தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணை யார் "வைத்துக்" கொள்வது என்பது தொடர்பாகஇருவரும் அடிக்கடி மோதிக் கொள்வார்களாம்.
புதுப்பேட்டையில் இருந்து வந்து, திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த என்னிடமே மோதுகிறாயா என்று போஸ் மீதுகடும் கோபமடைந்தார் சேகர்.
இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு போஸும்,அவரது நண்பர் ஒருவரும் குளம் ஒன்றின் அருகே நின்றுகொண்டிருந்தபோது, ஒரு கும்பல் வந்து அவர்களை சரமாயாக வெட்டித் தள்ளியது.இருவரும் அங்கேயேஇறந்தனர்.
இந்தக் கொலை தொடர்பாக ஆட்டோ சேகர் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
-மின்சாரம் தாக்கி 2 பேர் சாவு:
இதற்கிடையே சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் குடிநீர் குழாய்க்காக பள்ளம் தோண்டியபோது, மின்சாரகேபிளிலிருந்து மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலியானார்கள்.
திருவல்லிக்கேணி நெல்லையப்பன் தெருவில் பாலன் என்பவரும், அவரது மைத்துனர் சிவாவும் குடிநீர் குழாய்பதிப்பதற்காக பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தனர். அப்போது தரைக்குஅடியில் மின்சார கேபிள் போய்க்கொண்டிருந்ததை அவர்கள் பார்க்கவில்லை.
கடப்பாரையால் மின்சார கேபிளில்அவர்கள் வெட்டியபோது, அதிலிருந்து மின்சாரம் பாலனைத் தாக்கியது.இதனால் அவர் துடிதுடித்தார். அவரைக் காப்பாற்றுவதற்காக சிவா ஓடி வந்து பாலனைப் பிடித்தார்.
அப்போது இருவரும் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.












Click it and Unblock the Notifications