வீரப்பனிடம் தூது செல்ல கொளத்தூர் மணி தம்பி மறுப்பு
ஈரோடு:
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை வீரப்பனிடமிருந்து மீட்பதற்காகத் தூது செல்லப் போக மாட்டேன்என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவரான கொளத்தூர் மணியின் தம்பி பழனிச்சாமி மறுத்துவிட்டார்.
அவர் கூறுகையில்,
கடந்த 2000ம் ஆண்டு நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட போது என் அண்ணன் தான் தூதராகச் சென்றார்.
ஆனால் மனிதாபிமான அடிப்படையில் சென்ற அவரை அனைவரும் மிகவும் கொச்சைப்படுத்தி விட்டனர்.அவருக்கு ஏற்பட்ட கதி எங்கள் குடும்பத்தினர் யாருக்கும் வரக் கூடாது என்றே நான் விரும்புகிறேன்.
ஏற்கனவே தூது சென்றவர்களின் நிலையும் தற்போது மிகவும் பரிதாபமாகவே உள்ளது. மேலும் வீரப்பனிடம்தூது செல்லும் அளவுக்கு எனக்குத் தகுதி கிடையாது.
எனவே நான் தூது செல்லத் தயாராக இல்லை. தூது செல்வதை நான் மட்டுமில்லாமல் என் குடும்பத்தினரும்ஊர்க்காரர்களும் கூட விரும்பவில்லை என்றார் பழனிச்சாமி.
பழனிச்சாமியின் இந்த முடிவால் கர்நாடக அரசு அதிர்ச்சியடைந்துள்ளது. வேறு யாரைத் தூதராக அனுப்பலாம்என்று தீவிரமாக யோசித்து வருகிறது.
நாகப்பா மனைவி கோரிக்கை:
இதற்கிடையே வீரப்பனுடன் பேச கொளத்தூர் மணியைத் தான் அனுப்ப வேண்டும் என நாகப்பாவின் மனைவி பரிமளா கோரிக்கைவிடுத்தார்.
இன்று தமிழக பத்திரிக்கையாளர்களை பிரத்யோகமாக சந்தித்துப் பேசிய பரிமளா, தமிழக அரசும் இந்த விஷயத்தில் உதவ வேண்டும்.கர்நாடக அதிரடிப்படை தனது தேடுதல் வேட்டையை நிறுத்தியது மாதிரி தமிழக அரசும் தனது அதிரடிப்படையின தேடுதல் வேட்டையைநிறுத்த வேண்டும்.
வீரப்பனிடம் வேறு யாரையும் தூது அனுப்புவதை விட கொளத்தூர் மணியை அனுப்புவது தான் நல்லது என்றார்.