சென்னை அருகே பெண் காவலாளி கழுத்தை நெரித்துக் கொலை
சென்னை:
சென்னை அருகே உள்ள காரனோடை பகுதியில் பூச்சி மருந்து நிறுவனத்திற்குக் காவலாக இருந்த ஒரு பெண்கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டார்.
காரனோடையில் ஒரு பூச்சி மருந்துத் தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் சில மாதங்களாக மூடப்பட்டுக்கிடக்கிறது.
இதற்குக் காவலாளியாக முனுசாமி என்பவர் இருந்தார். அவர் இறந்ததும், அவரது மனைவி குப்பம்மாள் பகல்நேரத்தில் காவலுக்கு இருந்து வந்தார்.
இந்த நிறுவனத்தில் உள்ள லட்சக்கணக்கான ரூபாய் விலை மதிப்புடைய பொருட்களைத் திருட ஒரு கும்பல்அடிக்கடி முயன்று வந்தது. பெண்ணாக இருந்தாலும் அக்கும்பலை குப்பம்மாள் ஒவ்வொரு முறையும்விரட்டியடித்துள்ளார்.
இந்த நிலையில் நான்கு பேர் கொண்ட ஒரு கும்பல், நேற்று மாலை அங்கு வந்தது. அவர்கள் குப்பம்மாளின்கழுத்தை நெரித்துக் கொன்று, அருகில் உள்ள கிணற்றில் வீசினர்.
பின்னர் பூச்சி மருந்து நிறுவனத்தில் இருந்த பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.
இன்று காலை தான் கொள்ளையடிக்கப்பட்ட விஷயம் வெளியே தெரிய வந்தது. குப்பம்மாளைத் தேடிய போதுஅங்கிருந்த கிணற்றில் அவர் பிணமாக மிதப்பது தெரிய வந்தது.
இச்சம்பவம் குறித்து சோழவரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications