வீரப்பனுக்கு பீகார் தீவிரவாதிகள் கொடுத்த ஏ.கே.47
சத்தியமங்கலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கும் பீகார் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டிருப்பதாக போலீஸ்விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் கைதுசெய்யப்பட்ட அறிவழகன் மற்றும் வீரபாண்டியன் ஆகியோரிடம் நடந்த விசாரணையின் போதுஇந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
இந்த பீகார் தீவிரவாதகளிடமிருந்துதான் ஏ.கே. 47 ரக துப்பாக்கியை அறிவழகன் வாங்கி வீரப்பனிடம்கொடுத்துள்ளான்.
போலீஸாரின் பிடியில் சமீபத்தில் இளவரசன் குழுவைச் சேர்ந்த தமிழர் விடுதலைப் படையின் அறிவழகன்,வீரபாண்டியன், செந்தில் குமார், ஹரிகிருஷ்ணன், குமார், சிவா ஆகியோர் சிக்கினர்.
இவர்களில் செந்தில் குமார் என்பவன் பெரம்பலூர் மாவட்டம் செந்துறையைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிமுருகேசன் என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் அனைவருக்கும் வீரப்பனுடன் தொடர்பு உள்ளதாக இவர்கள் மீது ஆசனூர் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
தற்போது சிறப்புப் போலீஸ் படை பீகார் சென்று விசாரணையில் ஈடுபட முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications