பெரம்பலூர் முந்திரிக் காடுகளில் தோண்டத் தோண்ட கார் டிரைவர்களின் பிணங்கள்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் பிலாக்குறிச்சி பகுதியில் உள்ள முந்திரிக் காடுகளில் மேலும் 2 டாக்சி டிரைவர்களின்பிணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அரியலூர், பெரம்பலூர், வடலூர், பிலாக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சில கார் டிரைவர்கள் சமீபத்தில்தங்கள் கார்களுடன் காணாமல் போயினர்.
கார்களைத் திருடி விற்கும் கும்பல் தான் இந்தச் சம்பவங்களில் ஈடுபடுவதாகப் போலீசார் கருதினர்.
இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர வேட்டையில் தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த ஆறு தீவிரவாதிகள்கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் கடத்தப்பட்ட கார் டிரைவர்கள் கொலை செய்யப்பட்டுபெரம்பலூரைச் சுற்றியுள்ள முந்திரிக் காடுகளில் புதைக்கப்பட்டுள்ள அதிர்ச்சியான விஷயம் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த சீதாராமன் தற்போது ஒவ்வொரு பிணமும்புதைக்கப்பட்ட பகுதியை அடையாளம் காட்டி வருகிறான்.
இதுவரை மூன்று பிணங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் நேற்றும் இரண்டு பிணங்கள் மீட்கப்பட்டன.
இந்த ஐந்து பிணங்களைத் தவிர மற்றொரு சடலம் முழுவதுமாகச் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சீதாராமனிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->