போலி பிளஸ் டூ சான்றிதழ் மூலம் பி.இ. படித்த மாணவர் கைது
சென்னை:
பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த ஒரு மாணவர் போலி பிளஸ் டூ சான்றிதழ் கொடுத்து என்ஜினியரிங்கல்லூரியில் சேர்ந்தது தொடர்பாக அவரும், போலி சான்றிதழை விற்றவரும் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த ராஜேஷ், கடந்த 1999ம் ஆண்டு பிளஸ் டூ தேர்வில் கணிதப் பாடத்தில்தோல்வி அடைந்தார்.
இருப்பினும் என்ஜினியரிங் கல்லூரியில் சேர வேண்டும் என்று விரும்பிய ராஜேஷை வாசுதேவன் என்பவர்அணுகினார். கணிதப் பாடத்தில் பாஸ் செய்தது போன்ற சான்றிதழை நான் தயாரித்துத் தருகிறேன் என்றுஅவரிடம் வாசுதேவன் கூறினார்.
மேலும் இதற்காக ராஜேஷிடமிருந்து ரூ.25,000 வரை பெற்றுக் கொண்ட வாசுதேவன், கணிதப் பாடத்தில் ராஜேஷ்அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி அடைந்தது போல "பக்கா"வாக ஒரு பிளஸ் டூ மதிப்பெண் பட்டியலைத் தயார்செய்து கொடுத்தார்.
ராஜேஷும் இந்தப் போலி மதிப்பெண் பட்டியலை சமர்ப்பித்து, ஆவடி அருகே உள்ள தனியார் என்ஜினியரிங்கல்லூரியில் சேர்ந்து விட்டார்.
இந்நிலையில் இவரது பிளஸ் டூ சான்றிதழை ஆய்வுக்காக பள்ளிக் கல்வி இயக்குநரகத்திற்கு கல்லூரி நிர்வாகம்அனுப்பியிருந்தது. அங்கு அந்த சான்றிதழ் போலியாகத் தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வி இயக்குநர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராஜேஷை சென்னைகுற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். மேலும் போலி சான்றிதழை அவருக்குக் கொடுத்த வாசுதேவனையும்போலீசார் கைது செய்தனர்.
பிளஸ் டூ சான்றிதழ் போலவே "பக்கா" போலி சான்றிதழைத் தயாரித்த பவளவண்ணன் என்பவரைப் போலீசார்தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
வாசுதேவனும் பவளவண்ணனும் இது போல் நூற்றுக்கணக்கான போலி சான்றிதழைத் தயாரித்து விற்றுள்ளதாகத்தெரிய வந்துள்ளது. அவற்றைக் கண்டுபிடிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
-->
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications