காங்கிரஸ் வெளிநடப்பு
சென்னை:
காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய பிரதமர் வாஜ்பாயிடம் வலியுறுத்தப்படும்என்ற தீர்மானத்தை எதிர்த்து இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலிருந்து தமிழக காங்கிரஸ் கட்சி வெளிநடப்புசெய்தது.
காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை முதல்வர்ஜெயலலிதா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் இளங்கோவன் மற்றும் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி ஆணையம் ஆகியவற்றின் உத்தரவுகளுக்கு அடிபணிய மறுத்து வரும் கிருஷ்ணாதலைமையிலான கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற இந்தத் தீர்மானத்தைக் கடுமையாகஎதிர்த்த காங்கிரஸ் தலைவர்கள் இளங்கோவனும் பாலசுப்பிரமணியமும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலிருந்துவெளிநடப்பு செய்தனர்.
-->












Click it and Unblock the Notifications