"தம்" கேட்டு கோவை சிறையிலும் கைதிகள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

பீடி, சிகரெட் கேட்டு தென்னை மரத்தில் ஏறி உட்கார்ந்து 7 மணி நேரம் போராட்டம் நடத்தினார் கோயம்புத்தூர்மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒரு கைதி.

பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது போல, சிறைச்சாலைகளிலும் பீடி, சிகரெட்பிடிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இது "தம்" அடிக்கும் கைதிகளுக்கு மத்தியில் பெரும் அதிருப்தியைஏற்படுத்தியுள்ளது.

பல சிறைச்சாலைகளில் தங்களை பீடி, சிகரெட் புகைக்க அனுமதிக்குமாறு கோரி கைதிகள் நூதனப்போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மதுரை சிறையில் சமீபத்தில் மரத்தின் மீதும் காம்பவுண்ட் சுவர் மீதும் ஏறிஉட்கார்ந்து கொண்டு "தம்" கேட்டு கைதிகள் போராடினர்.

அதே பாணியில் கோயம்புத்தூர் சிறையிலும் ஒரு கைதி தென்னை மரத்தில் ஏறி நின்று கொண்டு போராட்டம்நடத்தினார். அதுவும் 7 மணி நேரத்திற்கு.

இந்தச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலைவாணன் என்ற கைதி குண்டர் சட்டத்தின் கீழ் கைதானவர்.

சிகரெட் புகைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதை விலக்கிக் கொள்ளுமாறும் தனக்கு பீடி, சிகரெட் வழங்க வேண்டும்என்றும் கோரி சிறை வளாகத்திற்குள் உள்ள தென்னை மரத்தின் மீது ஏறி நேற்று கலைவாணன் உட்கார்ந்துகொண்டார்.

சிறை அதிகாரிகள் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. பின்னர் ஒரு வழியாக மாலை 6.30மணியளவில்தான் கீழே இறங்கி வந்தார் கலைவாணன்.

இதேபோல 50க்கும் மேற்பட்ட கைதிகள் இது தொடர்பாக கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+