பட்டினி சாவு: சிறுவன் குடும்பத்துக்கு எல்.ஐ.சி. ஊழியர்கள் உதவி
திருவாரூர்:
திருவாரூர் அருகே பட்டினியால் இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு எல்.ஐ.சி. ஊழியர்கள் சங்கம் ரூ. 20,000 நிதியுதவிவழங்கியுள்ளது.
திருவாரூர் உள்பட காவிரிப் படுகை பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் விவசாயிகள் பட்டினி கிடக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் மூன்று வாரங்களுக்கு முன் இப் பகுதியில் உள்ள ஆதிச்சபுரத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்ற மாணவன் சாப்பிட ஏதும்இல்லாததால் பசியுடன் பள்ளிக்கு நடந்து சென்றபோது ரோட்டிலேயே சுருண்டு விழுந்து இறந்தான்.
இந்தப் பட்டினிச் சாவை அரசு இதுவரை திசை திருப்புவதில் தான் கவனம் செலுத்தி வருகிறது. அந்தச் சிறுவன் வயிற்றுப்போக்கால் இறந்ததாக அரசு கூறி வருகிறது.
ஆனால், அது பட்டினிச் சாவு தான் என்பதை அந்த ஊர் மக்கள் உறுதி செய்துவிட்டனர். இந்தச் சிறுவனின் குடும்பத்துக்கு அரசின்உதவி ஏதும் கிடைக்கவில்லை.
இதையடுத்து எல்.ஐ.சி. ஊழியர்கள் சங்கம் இந்தச் சிறுவனின் குடும்பத்துக்கு ரூ. 20,000 நன்கொடை வழங்கியுள்ளது. மேலும்அவனது வீட்டுக்கு சில மாதங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்களையும், உடைகளையும்எல்.ஐ.சி. ஊழியர்கள் வழங்கினர்.
-->












Click it and Unblock the Notifications