நாங்க எங்களுக்காகவா லஞ்சம் வாங்குறோம்
மதுரை:
லஞ்சம் வாங்கியதாக தாசில்தார் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து மதுரை மாவட்ட வருவாய்த்துரைஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வருவாய்த்துறை அலுவலகங்களில் குறிப்பாக தாசில்தார், கலெக்டர் அலுவலகங்களில் லஞ்சப் பேய் தலைவிரித்துஆடுவதை நாம் பலமுறை குறிப்பிட்டு எழுதியுள்ளோம்.
இரு தினங்களுக்கு முன் மதுரை வடக்கு தாசில்தார் பழனியப்பன் நிலப்பட்டா தருவதற்காக ரூ. 50,000 லஞ்சம்வாங்கியபோது கையும், களவுமாக பிடிபட்டார்.
அவரது வீட்டிலும் அலுவலகத்திலும் விடிய விடிய ரெய்ட் நடத்தப்பட்டது. இதையடுத்து அவருக்கு லஞ்சம் வாங்கஉதவிய 2 பேரையும் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கைது செய்தனர்.
இந்த லஞ்ச தாசில்தாரின் வீட்டில் இரவில் ரெய்ட் நடத்தப்பட்டதற்கு மதுரை மாவட்ட வருவாய்த்துறை ஊழியர்கள்கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாங்கள் லஞ்சம் வாங்குவதே அடிக்கடி இங்கு வரும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளை கவனிக்கவும்உபசரிக்கவம் தான். அதற்காக எங்களுக்கு பெரும் பணம் தேவைப்படுகிறது. இந்த உபசரிப்பு வேலை எங்களிடம்தரப்படாவிட்டால் எங்களுக்கு லஞ்சமே தேவையில்லை.
இனி மதுரைக்கு வரும் அதிகாரிகளையும் அமைச்சர்களையும் நாங்கள் கவனிக்க மாட்டோம். அவர்களதுவருகையைப் புறக்கணிப்போம் என்று இந்த ஊழியர்கள் கூறியுள்ளனர்.
அடடா, லஞ்சத்துக்கு இவ்வளவு வேலை இருக்கா!












Click it and Unblock the Notifications