காவிரி விவகாரம்: முரசொலி மாறன் பதவி விலகத் தயாரா? - அதிமுக கேள்வி

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

காவிரிப் பிரச்சினையில் பிரதமரின் பாரபட்சப் போக்கைக் கண்டித்து தங்களது மத்திய அமைச்சர் பதவிகளைராஜினாமா செய்ய திமுக, மதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் தயாரா என்று அதிமுக கொள்கை பரப்புச்செயலாளரான ஓ.எஸ். மணியன் கேட்டுள்ளார்.

மன்னார்குடியில் அதிமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் மணியன் சிறப்புபேச்சாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது முரசொலி மாறன் மற்றும் மதிமுக அமைச்சர்களை அவர்கடுமையாகத் தாக்கிப் பேசினார். அவர் பேசுகையில்,

காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்திற்கு சாதகமாக பிரதமர் நடந்து கொண்டுள்ளார். இதை பா.ஜ.கவினர்கண்டிக்கவில்லை. அவர்களுடைய கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகளும்கண்டிக்கவில்லை. மாநில நலனை விட்டுக் கொடுத்து விட்டனர்.

காவிரிப் பிரச்சினையில் இவர்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் இருக்குமானால் பிரதமரின் போக்கைக்கண்டித்து மத்திய அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்யத் தயாரா? முரசொலி மாறன் பதவி விலகுவாரா, டி.ஆர்.பாலு பதவி விலகுவாரா?

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்காக ஏராளமான திட்டங்களைமேற்கொண்டு வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் ரூ.317 கோடி அளவிலான வட்டி மற்றும் அபராத வட்டியைஆகியவற்றை ரத்து செய்து விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்தது எங்கள் அரசு.

அதேபோல, ரூ.164 கோடியில் வறட்சி நிவாரணப் பணிகளை துவக்கி நடத்தி வருகிறது இந்த அரசு என்றார்மணியன்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+