கர்நாடக அரசைக் கலைக்க ராமதாஸ் வலியுறுத்தல்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
தமிழகத்துக்கு தண்ணீர் விடுவதை நிறுத்தி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அவமதித்த கர்நாடக காங்கிரஸ் அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்று பட்டாளி மக்கள் கட்சி கோரியுள்ளது.
அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாண்டிச்சேரியில் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
மிக தைரியமாக நீதிமன்றத்தை அவமதித்துள்ளது கர்நாடக அரசு. இதனால் கிருஷ்ணாவின் அரசைக் கலைக்க வேண்டும்.பிரதமர் வாஜ்பாயின் உத்தரவையும் தூக்கி குப்பையில் எறிந்திருக்கிறார்கள்.
இதன்மூலம் கர்நாடகம் அரசியல் சட்டத்தையே மீறிவிட்டது.
இலங்கையில் நிரந்தர அமைதியை பாட்டாளி மக்கள் கட்சி விரும்புகிறது. இதனால் தாய்லாந்து பேச்சுவார்த்தையைவரவேற்கிறோம்.
-->












Click it and Unblock the Notifications