கபினியை மீண்டும் தமிழகத்திடம் தர வேண்டும்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

தண்ணீர் தராமல் அழிச்சாட்டியம் செய்யும் கர்நாடக அரசுக்கு சரியான பாடம் புகட்டும் வகையில் கபினி மற்றும்சாரங்கி அணைகளை கைப்பற்றச் செல்வோம் என என்று திருச்சி மற்றும் தஞ்சை பகுதி விவசாயிகளின் சங்கங்கள்அறிவித்துள்ளன.

இந்த விஷயத்தில் கர்நாடகத்தைக் கட்டுப்படுத்தாமல் இருந்து வரும் பிரதமர் வாஜ்பாய்க்கு எதிராகவும்விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

திருச்சி, தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்திலிருந்து பிரிக்கப்பட்ட பகுதிகளான கபினி அணை மற்றும் சாரங்கி அணை ஆகியவை அமைந்துள்ளஇடங்களை மீண்டும் கைப்பற்ற வேண்டும். அப்போதுதான் நமக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கும். நியாயமும்கிடைக்கும்.

நடுவர் மன்ற கட்டளையை மீறி அதிக பரப்பளவில் கர்நாடகம் பயிர் செய்து வருகிறது. எந்தத் தீர்ப்பையும்அவர்கள் மதிப்பதில்லை. அணைகளை கைப்பற்றுவதுதான் இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு.

அதேபோல, நெய்வேலியிலிருந்து கர்நாடகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தையும் தமிழகம் நிறுத்த வேண்டும்என்று கூறப்பட்டுள்ளது.

வாஜ்பாய்க்கு எதிராக...

இதற்கிடையே கர்நாடக அரசைக் கண்டித்தும், பிரதமர் வாஜ்பாயின் பாரபட்சப் போக்கைக் கண்டித்தும் திருச்சியில்நடந்த விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்தை விவசாயிகள் வெளிநடப்புச் செய்தனர்.

திருச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மணிவாசகம் தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்புக்கூட்டம் நடந்தது.இதில் திருச்சி, தஞ்சைப் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கர்நாடக அரசுக்கு சாதகமாக நடந்து கொள்வதாக பிரதமர் வாஜ்பாய் மீது குற்றம் சாட்டிய அவர்கள் கூட்டத்தைப்புறக்கணித்துவிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் கூடி வாஜ்பாய் மற்றும் எஸ்.எம்.கிருஷ்ணாவைக்கண்டித்து கோஷமிட்டனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+