நடமாடும் எமன்களுக்கு சென்னையில் தடை
சென்னை:
அப்பாவி மக்களின் உயிர்களைப் பலி வாங்கி வரும் மீன்பாடி வண்டிகளுக்கு சென்னையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
என்பீல்ட் என்ஜின் பொருத்தப்பட்ட இந்த மீன் பாடி வண்டிகளில் பிரேக் மட்டும் சைக்கிள்களுக்கு உரியது. இதனால் அசுர வேகத்தில் வரும்இந்த வண்டிகள் அடிக்கடி யார் மீதாவது மோதி தூக்கி எறிந்துவிட்டுச் செல்வது வழக்கம். இதில் பல அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்த வண்டிகளுக்கு லைசென்ஸ் கிடையாது, நம்பர் பிளேட் கிடையாது. இதை ஓட்டுபவர்களுக்கும் லைசென்ஸ் வேண்டாம்.
இந்த வண்டிகளை ஓட்டுவது முரட்டு மீனவர் குப்பத்து ஆட்கள் என்பதால் பொது மக்களும் அவர்களைத் தட்டிக் கேட்க முடிவதில்லை.போக்குவரத்து போலீசாருக்கு மாமூல் வசூலிப்பது உள்ளிட்ட முக்கிய வேலைகள் இருப்பதால் இந்த எமன் வாகனங்களைக் கண்டுகொள்வது இல்லை.
ஆனால், சென்னை மீனவர் குப்பங்களின் வாக்குகளை மனதில் வைத்துக் கொண்டு இந்த வாகனங்களை திமுக, அதிமுக என இருஅரசுகளும் தடை செய்யாமல் இருந்து வந்தன.
இந் நிலையில் இந்த வாகனங்களைத் தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதைவிசாரித்த நீதிமன்றம் இந்த வண்டிகளுக்குத் தடை விதித்தது.
இதையடுத்து மீனவர்கள் மற்றும் அடாவடி ரவுக் கும்பல்களிடம் இருந்து இந்த வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.இன்று காலை முதல் இந்த வண்டிகளை போலீசார் கைப்பற்ற ஆரம்பித்தனர்.
-->












Click it and Unblock the Notifications