கருணாநிதிக்கு சமூக நீதிக் கட்சி கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரிப் பிரச்சினையில் திமுக தலைவர் கருணாநிதி மேற்கொண்டுள்ள நிலை கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றுசமூக நீதிக் கட்சித் தலைவர் ஜெகவீரபாண்டியன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், முதல்வர் ஜெயலலிதா கூட்டியிருந்த அனைத்துக் கட்சிக்கூட்டதில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து விட்டு, எதிர்க்கட்சிகளை ஜெயலலிதா மதிப்பதில்லை என்றுகருணாநிதி கூறியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
காவிரி ஆணையத்தை ஜெயலலிதா மதிக்கவில்லை என்றும் திமுக தலைவர் கருணாநதி கூறியிருப்பதுநியாயமற்றது. விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பது போல அவர் நடித்து வருகிறார் என்று கூறியுள்ளார்ஜெகவீரபாண்டியன்.
-->












Click it and Unblock the Notifications