தமிழகம் நீரை வீணடிக்கிறது: நஞ்சுண்டப்பா உளறல்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
தமிழக விவசாயிகள் தண்ணீரை வீணடிப்பதாக கர்நாடக விவசாயிகள் சங்கத்தின் தலைவரான நஞ்சுண்டப்பா உளறினார்.
இன்று தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ஆண்டுதோறும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் 500 டி.எம்.சி. நீரைவீணடிப்பதாகவும் இதை ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வே உறுதிப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
இவர் தன்னைத் தானே விவசாயத்துறை நிபுணர் என்று அழைத்துக் கொள்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல கர்நாடக முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் நஞ்சே கெளடா பேசுகையில், கர்நாடகத்தில் நாங்கள் எங்கள் பணத்தைப்போட்டு அணையைக் கட்டி வைத்திருப்பது எங்களுக்கு தண்ணீரைத் தேக்கி வைக்கத் தானே தவிர, அதில் தண்ணீரைச் சேமித்துதமிழகத்துக்குத் தருவதற்காக அல்ல என்றார்.
-->












Click it and Unblock the Notifications