கோவை மாபெரும் பெட்ரோல், டீசல் மோசடி
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாநகராட்சிக்குச் சொந்தமான லாரிகள், வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போடுவதில் மாபெரும் முறைகேடுநடந்துள்ளது. பல லட்சம் மதிப்புள்ள பெட்ரோல், டீசல் வெளியில் விற்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்குச் சொந்தமான வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போடவும் வாகனங்களைப் பழுது பார்க்கவும் சாய் பாபாகாலனியில் ஒரு பணிமனை (வொர்க் ஷாப்) உள்ளது.
இந்தப் பணிமனையில் உள்ள அதிகாரிகளும் ஊழியர்களும் கூட்டாக சேர்ந்து பெட்ரோல், டீசலை வெளி மார்க்கெட்டில் விற்றுள்ளனர். பலஆண்டுகளாக நடந்து வந்த இந்த மோசடி இப்போது தான் வெளியில் தெரியவந்துள்ளது.
இது குறித்து தகவல் கிடைத்தவுடன் மாநகராட்சி மேயர் மலரவன் இந்தப் பணிமனைக்குச் சென்று பெட்ரோல், டீசல் இருப்பு குறித்துஆராய்ந்தார். அப்போது இந்த மோசடி உறுதியானது.
இதையடுத்து இந்தப் பணிமனையின் மேனேஜர் சரவணன் உள்பட 4 பேர் மீது போலீசில் புகார் தரவும் மாநாகராட்சி மூலம் நடவடிக்கைஎடுக்கவும் உத்தரவிட்டார்.
வண்டிகளுக்கு ஊற்றப்படும் பெட்ரோலின் அளவை உயர்த்திக் காட்டுவது, பெட்ரோல், டீசல் ஊற்றப்படாத வாகனங்களையும் கணக்கில்சேர்ப்பது என்று பல வகையான மோசடிகள் நடந்துள்ளன.
இவ்வாறு மிச்சம் பிடிக்கப்பட்ட பெட்ரோலையும் டீசலையும் வெளி மார்க்கெட்டில் விற்றுள்ளனர். இந்த பெட்ரோலையும் டீசலையும் பிறதனியார் பெட்ரோல் பங்குகளும் வாங்கி விற்று வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-->












Click it and Unblock the Notifications