கர்நாடக அணைகளை கையகப்படுத்த தமிழகம் கோரிக்கை
டெல்லி:
கர்நாடகத்தில் உள்ள அணைகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு தமிழகத்துக்கு நீரைத் திறந்து விட வேண்டும் எனபிரதமர் வாஜ்பாயிடம் தமிழக அனைத்துக் கட்சிக் குழு கோரிக்கை விடுக்கவுள்ளது.
இன்று காலை சென்னையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான 47 பேர் அடங்கிய அனைத்துக் கட்சிக் குழு சிறப்புவிமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றது.
இக் குழு மாலை பிரதமர் வாஜ்பாயைச் சந்திக்கும் இந்தக் குழு கர்நாடக அணைகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுதமிழகத்துக்கு உரிய நீரைத் திறந்துவிட வேண்டும் என்று நேற்று சென்னையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவைபிரதமரிடம் வலியுறுத்தியது.
முதல்வர் ஜெயலலிதா உள்பட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் இதே கோரிக்கையை பிரதமரிடம் முன் வைத்தனர்.
நேற்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று டெல்லி செல்லும் குழுவில் இடம் பெறமறுத்துவிட்டது. கர்நாடக அணைகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கமுடியாததால் இந்தக் குழுவில் இடம் பெறவில்லை என அக் கட்சி கூறியுள்ளது. இந்தக் கோரிக்கையே அபத்தமானது என அக் கட்சிகருத்துத் தெரிவித்தது.
திமுகவும் இந்தக் குழுவில் இடம் பெறவில்லை. நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் திமுக புறக்கணித்தது நினைவுகூறத்தக்கது.
இன்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் டெல்லி சென்ர குழுவில் அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றன.
நிதியமைச்சர் பொன்னையன், பொதுப் பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர், நீர்வளத்துறைசெயலாளர் ஆகியோரும் உடன் சென்றனர்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி, தமிழகத்தைகர்நாடகம் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. இதில் பிரதமர் வாஜ்பாய் தலையிட வேண்டும். கர்நாடகம் தொடர்ந்து முரண்டு பிடித்தால்தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு மிகப் பெரிய பந்த் நடத்துவோம் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு கூறுகையில், காவிரி ஆணையத்தை மட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றத்தின்உத்தரவையும் சேர்த்து கர்நாடகம் மீறி இருக்கிறது. அந்த மாநிலத்துக்குக் கடிவாளம் போடாவிட்டால் பெரும் பிரச்சனை வெடிக்கும்என்றார்.
-->












Click it and Unblock the Notifications